ஆஸ்திரேலியாவில் மனைவியை போட்டுத்தள்ளி விட்டு மகனுடன் இந்தியா வந்த கணவன் – நடந்தது என்ன.!

0
249

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சைதன்யா மதகனி(36). இவர் தனது கணவன், மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை சைதன்யா மதகனி, ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் இருக்கும் பக்லி என்ற பகுதியில் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விக்டோரியா காவல்துறை, மார்ச் 9 தேதி வின்செல்சியாவிற்கு அருகிலுள்ள பக்லியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. துப்பறியும் நபர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளி, கொலை செய்யப்பட்டவர் இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருக்கலாம். குற்றவாளி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சைதன்யா மதகனியின் கணவன், ஆஸ்திரேலியாவிலிருந்து ஹைதராபாத் வந்து அவரின் மகனை சைதன்யா மதகனியின் பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

இது குறித்து ஹைதராபாத்தின் உப்பல் எம்.எல்.ஏ பண்டாரி லக்ஷ்மா ரெட்டி, கொலை செய்யப்பட்ட பெண் எனது தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால், இந்த விஷயம் குறித்துத் கேள்விப்பட்டவுடன் அவரது பெற்றோரைச் சந்தித்தேன். பெண்ணின் பெற்றோர் அளித்த தகவலின்படி மருமகன், அவர்களின் மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

மேலும், அந்தப் பெண்ணின் பெற்றோரின் வேண்டுகோளின் பேரில், அந்தப் பெண்ணின் உடலை ஹைதராபாத்துக்குக் கொண்டு வர வெளியுறவு அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். இது குறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் அலுவலகத்திற்கும் தெரிவித்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

“உயிரிழந்த நபர் வின்செல்சியாவிற்கு அருகிலுள்ள பக்லியில் கிடந்தார். அதனையடுத்து துப்பறியும் நபர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் இறந்த நபரை மவுண்ட் பொல்லாக் சாலையில் மதியம் கண்டுபிடித்தனர்.” என்று விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here