முல்லைத்தீவில் இருந்து நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து..!

0
181

வவுனியா புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார்.

இந்நிலையில் குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் புளியங்குளம் சந்திக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்தார்.வாகனத்தின் முன்சக்கரம் வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here