தலைமன்னார் சிறுமி ப.டு.கொ.லை – சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு.!

0
164

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று மன்னார் நீதவான் சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சான்றுப்பொருட்களின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்காகவும், சிறுமியின் மரண விசாரணை முடிவுகளை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்த வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியலும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் கடந்த மாதம்15 ஆம் திகதி மாலை காணாமல் போன 10 வயதான சிறுமியின் சடலம், மறுநாள் தென்னந்தோப்பிலிருந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here