முள்ளியவளை பகுதியில் விபத்து – உழவு இயந்திரத்தில் சென்ற 3 மாணவர்கள் படுகாயம்.!

0
138

14-03-24 இன்று முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்லா விளையாட்டுப் போட்டி ஒன்றின் தயார்படுத்தலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் உழவியந்திரத்தில் சென்ற வேளை உழவியந்திரம் தடம் புரண்டதில் மூவர் படுகாயம் அடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளியவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்று நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொருட்களை ஏற்றுவதற்காக பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் உழவியந்திரத்தில் சென்ற வேளை உழவிந்திரம் பெட்டி தடம் புரண்டுள்ளது.

இந்த சம்பவம் முள்ளியவளை ஆலடி சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது, பெட்டி தடம் புரண்டதில் அதில் பயணித்த மாணவர்கள் மூவர் படுகாயம் அடைந்துள்ளார்கள் மூன்று மாணவர்களும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்,

இந்த விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளதுடன் உழவு இயந்திரத்தினை பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள் அதன் சாரதி விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here