கிணற்றில் தண்ணீர் அள்ளிய 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. பெற்றோர்களே அவதானம்.!

0
133

புத்தளம் – மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து வந்த 06 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுமி நேற்று (15) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வாளி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் எடுக்கச் சென்ற வேளையில் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர்களே தயவு செய்து உங்கள் பிள்ளைகள் மீது ஒரு கண்ணை வைத்துக்கொள்ளுங்கள், வெப்பநிலை அதிகரித்து காணப்படும் இந்த காலங்களில் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here