யாழில் வீட்டுக்கு முன் சடலமாக மீட்க்கப்பட்ட குடும்பப் பெண்.. நடந்தது என்ன.!

0
232

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான நிலையி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவரே தாக்குதல் நடத்தியுள்ளார் என சந்தேகம் நிலவுகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொல்புரம் கிழக்கு, சிவபூமி வீதியில் இன்று மதியம் இந்த சம்பவம் நடந்தது. 49 வயதான இராசேந்திரம் செல்வநிதி என்பவரே உயிரிழந்தார்.

குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்த நிலையில் இன்று அவரது வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர்கள் தூரத்தில் உள்ள அயல்வீட்டுக்கு சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்துள்ளார்.

பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கணவர் அவரை தாக்குவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், தாயார் வழமையாக பாவிக்கும் மாத்திரைகளை விழுங்கிவிட்டு அயல்வீட்டுக்கு சென்றதாக அவரது மகள் தெரிவிக்கின்றார்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற விபரங்கள் தெரியவராத நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது உடற்கூற்று பரிசேதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here