யாழ்ப்பாணம் – சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி நேற்றுமாலை அவரது நண்பியுடன் நீராடிக்கொண்டு இருக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டார். இதன்போது குறித்த நண்பி அபயக் குரல் எழுப்பிய வேளை அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
இருப்பினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளன. நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோர்களே தயவு செய்து உங்கள் பிள்ளைகள் மீது ஒரு கண்ணை வைத்துக்கொள்ளுங்கள், வெப்பநிலை அதிகரித்து காணப்படும் இந்த காலங்களில் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது.