கிளி – பளைப் பகுதியை சேர்ந்த கடந்த வருடம் திருமணம் செய்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 23 வயது தனுசியா என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்னுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை பபெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.