93 பயணிகளுடன் கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் தரையிறக்கம்.!

0
414

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்று சில நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விமானம் புறப்பட்ட பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

93 பயணிகளுடன் இன்று அதிகாலை 01.13 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்ட UL 173 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அதிகாலை 01.55க்கு விமானம் புறப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here