முல்லைத்தீவு – விசுவமடுவில் சிசு மரணம் – பாஸ்ரரும், பெண்ணும் சிறையில் அடைப்பு.!

0
244

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த (15.03.2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த பெண்ணுடன் இருவரை கைது செய்துள்ளனர்.

குழந்தையை குறித்த பெண்ணின் வீட்டில் பிரசவித்து பொலித்தீன் பையினால் சுற்றப்பட்டு கொண்டு சென்று புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியில் எரித்ததாகவும் குறித்த பெண்ணுடன் தொடர்பு சந்தேகிக்கப்படும் பாஸ்ரர் ஒருவர் குழந்தையை எரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணும், பாஸ்ரர் உள்ளிட்ட இருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 19.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலீசார் இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து மேலதிக சான்று பொருட்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here