கோர விபத்தில் தாய் மரணம்.. பிள்ளைகள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்.!

0
275

ஆனமடுவ பகுதியிலிதுந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் ஆனமடு பிரதான வீதியின் கல்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ பகுதியிலிதுந்து புத்தளம் நோக்கிச் சென்ற வானுடன் புத்தளத்திலிருந்து ஆனமடு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது விபத்துக்குள்ளானவர்களை உடனடியாக அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் பயணித்தப் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

புத்தளம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்வையிட்டு குறித்த பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் ஆனமடுவ வேம்புவெவ கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஆனமடுவயில் இருந்து வந்த லொறி மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் தாயுடன் பயணித்த பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் ஆனமடு வெம்புவெவ சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here