வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. கதறும் பெற்றோர்.!

0
218

மலையகம் – வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பின்ஓய மேல் பகுதியில் உள்ள தோட்ட வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய கதிரவேல் ரோஹித்தின் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தோட்ட வீடொன்றில் விளையாடிக்கொண்டிருந்த இந்தச் சிறுவன் காணாமல்போன நிலையில்,சிறுவனின் தந்தையும் தோட்டத்தில் வேலை செய்பவர்களும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, சிறுவன் தோட்ட வீட்டின் பின்புறத்தில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here