யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.
விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது.
இதன்போது 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான எரிபொருள் வீணாகிப்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.