முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அக்காவின் கணவரால் கர்ப்பம் தரித்த சிறுமி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தானால் 15 வயது சிறுமி கர்பமாக்கப்பட்ட சம்பவம், புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன, இளவயது கர்பம் தரித்தல் என்பது தற்போது சமூகத்திற்குள் பெரும் சவாலாக காணப்படுகின்றது.
அனுமதி பெறாத சில தனியார் மருந்தகங்கள் இதற்கு துணைபோவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் 15 வயதுடைய குறித்த சிறுமி வள்ளுவர்புரம் பகுதியில் அவரது தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
சிறுமியின் அக்கா குடும்பம் பிரிந்த நிலையில் அக்கா நெட்டாங்கண்டல் பகுதியில் வசித்து வருகின்றார். அக்கா கணவரான சிறுமியின் அத்தான் தனியாக வசித்து வருகின்றார், குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
குறித்த சிறுமி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கம் அத்தானிடம் தொலைபேசியில் உரையாடி வருகின்றார், இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு யூலை மாதம் அத்தான் சிறுமி வசித்த வீட்டிற்கு வந்தபோது சிறுமி தனிமையில் இருந்துள்ள நிலையில் சிறுமியின் விருப்பத்திற்க அமைய பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அன்று இரவே சிறுமியினை அழைத்துக்கொண்டு மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் தங்கி குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் சிறுமி ஆறுமாத கர்ப்பம் தரித்த நிலையில் கடந்த 20.03.2024 அன்று வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சம்பவம் வெளித்தெரியவந்துள்ளது.
சிறுமியினை கர்ப்பம் தரிக்க வைத்த அத்தான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக சிறுவன் நன்னடத்தை அதிகாரிகளால் உரிய திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இருந்தும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.