தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் இருந்த தேரர் ஒருவர் தியத்தலாவ பொலிஸ் குழுவினால் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பொரலந்தவில் உள்ள ஒரு விகாரையில் வசிக்கும் நாற்பத்தாறு வயதான தேரர் ஆவார்.
அந்தப் பெண் அதே பகுதியில் வசிக்கும் நாற்பது வயது திருமணமான பெண்.
நபர் ஒருவர் பெண் ஒருவர் மாற்றுப் பெயருடன் லாட்ஜ் ஒன்றிற்கு வந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.