மட்டக்களப்பில் தனியார் பஸ் மோதியதில் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே மரணம்.!

0
143

மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியின் மாவடிவேம்பு பிரதேசத்தில் இன்று 31.03.2024 இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

பாதசாரிகள் கடவைக்கு அண்மித்த பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மிக வேகமாகச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியைக் குறுக்கிட்ட மோட்டார் சைக்கிளை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் சென்ற முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய தங்கராசா ஜெயம் என்ற கூலித்தொழிலாளி பலியாகியுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பஸ்ஸின் சாரதி சந்திவெளி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் சடலத்தை அடையாளங்காட்டிய பின்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here