மட்டக்களப்பு இளைஞன் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்ப்பு.!

0
207

யாழ் கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு 1ம் குறிச்சி பிள்ளையார் கோயில் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட ரவிச்சந்திரன் கதுசன் என்கிறே இளைஞனே உயிரிழந்துள்ளார் என அறியப்படுகிறது.

நேற்றையதினம் மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல்போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடல்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here