கிளிநொச்சி பகுதியில் நடந்த கத்திக்குத்தில் குடும்பஸ்தர் மரணம் – ஒருவர் கைது..!

0
277

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு சந்திப்பகுதியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கத்திகுத்தில் முடிந்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்படுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியை பார்வையிட்டு விட்டு திரும்பி சென்ற பொழுது வீதியில் ஏற்பட்ட கைகலப்பு கத்திக்குத்தாக மாறியது.

இதன் காரணமாக கத்தியால் பலதடவைகள் பலமாக குத்தப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (04) அரங்கேறியது.

30 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிஸ் (வயது-30) என்ற குடும்பஸ்தரே கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தருமபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது உயிரிழந்தார்.

கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்தவரின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தருமபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளி – தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாறு, பிரமந்தனாறு, போன்ற பகுதிகளில் அடிக்கடி இளைஞர்க குழுக்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here