பிரான்ஸில் இலங்கை தமிழரையும், விடுதலை போராட்டத்தையும் இழிவாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசி டிக்டொக்கில் வீடியோ வெளியிட்ட பெண்ணை புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் தாக்கிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியில் பெண்ணொருவர் ஈழ தமிழர்களையும், தலைவரையும், போராட்டத்தில் கலந்துகொண்ட மாவீரர்கள் பற்றியும் தவறாக பேசியதாக தெரியவந்துள்ளது.
இதனையறிந்த அங்கிருந்த இலங்கை தமிழர்கள் பெண்ணிடம் சென்று ஈழத்தை பற்றி பேசக் பேசக்கூடாது என கூறி தாக்கியுள்ளனர். மேலும் கையில் இருந்த உணவை அவர் மீது ஏறிந்துள்ளனர்.
மேலும், குறித்த பெண் ஈழத்தில் உள்ள தாய் மார்களை எல்லாம் வே-சி என கூறியுள்ளதாக என கூட்டத்தில் இருந்த ஒருவர் குறித்த காணொளியில் தெரிவித்துள்ளார். குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.(சமூக வலைத்தளம் அடிப்படையில் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது)
இழிவாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசி டிக்டொக்கில் வீடியோ வெளியிட்ட பெண் (சமூக வலைத்தளம்)