கிளிநொச்சி – கரடிப்போக்கு சந்தியில் வேலைக்காக சென்ற யுவதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
நேற்று (04) அரச பேருந்தில் பயணித்த பெண் தரிப்பிடத்தில் இறக்கியுள்ளார்.
இதன்போது, பெண் இறங்குவதை அவதானிக்காத சாரதி பயணிகளை ஏற்றிய பின்னர் பேருந்தை செலுத்தியுள்ளார்.
இதன்போது விழுந்த குறித்த பெண் சிறு காயங்களிற்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே பஸ்ஸில் பயணிக்கும் பெண்களோ ஆண்களோ மிகவும் அவதானமாக இருக்க வேண்டும், இறங்கும் போதும் ஏறும் போதும் பஸ் நிறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.