யாழில் நடந்த கோர விபத்து.. வெளியான CCTV காட்சி.!

0
242

யாழ். கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த ஒருவர் புதிய செம்மணி வீதி ஊடாக கடக்க முற்பட்ட நிலையில் சைக்கிளில் வந்த நபருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் சைக்கிள் பயணித்த நல்லூரை சேர்ந்த க.மோகனகுமார் (வயது-61) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (05) உயிரிழந்துள்ளார்.

சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளினை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. குறித்த இளைஞன் மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்து வந்த நிலையில், விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்த வேளையிலையே இளைஞன் விபத்தினை ஏற்படுத்தி உள்ளதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here