13 வயது சிறுமி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – முல்லைத்தீவு பகுதியில் பணிபுரியும் இராணுவ சிப்பாய் கைது.!

0
193

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள ஒரு பகுதியில் கடமையாற்றும் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில…

தம்புள்ள கலேவெல பகுதியினை சொந்த இடமாக கொண்ட குறித்த இராணுவ உத்தியேகத்தர் வீட்டில் தங்கி நின்றவேளை தனது உறவு முறையான 13 அகவையுடை சிறுமியை பாலியல் துஸ்பிரயேகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கலேவெல பொலீசில் வழக்கு பதியப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் முள்ளியவளை பொலீசாருக்கு குறித்த சந்தேக நபரை கைதுசெய்ய தகவல் அனுப்ப்பட்டுள்ளது.

அவர் தனது கடமைக்காக முள்ளியவளை பொலீஸ் பிரிவின் கீழ் உள்ள பகுதி ஒன்றில் கடமையில் இருந்தவேளை 03.04.2024 அன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 09.04.2024 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவரது குற்றம் தொடர்பிலான வழக்கு விசாரணை தம்புள்ள நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில் தம்புள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் மேற்கொண்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here