வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து; இளைஞன் உயிரிழப்பு..!

0
129

வவுனியா – செட்டிக்குளம், வாழவைத்த குளம் பகுதியில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மையில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதுண்டதில், மோட்டார் சைக்கிள் சாரதியான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் 21 வயது மதிக்கத்தக்க அல்முதீன் மிஹ்ராஜ் என்ற இளைஞரே உயிரிழந்தவராவர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here