ஆஸ்திரேலியாவின் போண்டி ஜங்ஷன் புறநகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் திடீர் கத்தியால் குத்தியதில் பரபரப்பு ஏற்பட்டது.
வணிக வளாகத்தில் திரண்டிருந்த மக்கள் திடீரென கத்தியால் தாக்கி மர்ம நபர்களால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் சுமார் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் கொலையாளிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மற்றவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. பொதுமக்கள் மீண்டும் இதுபோன்ற கொடூர தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால் போலீசார் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
மேலும், வணிக வளாகத்தின் மூலை முடுக்கிலும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பலர் வெளியே வர முடியாமல் மால் கடைகளில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.