முல்லைத்தீவு இ.போ.ச – சாலையில் பணிபுரிந்து வந்த குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு.!

0
203

யாழ் – வடமராட்சியில் இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தரே தீடிரென உயிரிழந்துள்ளார்,

இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில் நடத்துனராக பணிபுரிந்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை கடந்த இருபது நாட்களாக சுகயீனமுற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நான்கு தினங்களுக்கு முன்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரத்தப்புற்று நோய் காரணமாகசிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

அல்வாய் தெற்கு உண்டுவத்தைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கவேல் சதீஸ்குமார் வயது 50 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here