மலையகம் – காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
காசல்ரீ தோட்டத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த, டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும் 18 வயதுடைய மாணவர் ஒருவரை இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த மாணவன் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தர கல்வி (Btech) கற்பதாகவும் தெரிவித்த நோட்டன் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த பாடசாலை மாணவன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பிரதேசவாசிகள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து மாணவனின் சடலத்தை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எச்சரிக்கையை புறக்கணித்து நீர்த்தேக்கத்தில் நீந்திக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.