யாழ்ப்பாண கடற்தொழிலாளி ஒருவர் முல்லைத்தீவு கடலில் சடலமாக மீட்ப்பு.!

0
175

கடலில் கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்படுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடத்தொழிலுக்குச் சென்ற கடற் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படகிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

17-04-24 மாத்தளன் பகுதியில் வசித்து வரும் 45 வயது குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு கடத்தொழிலுக்குச் சென்ற நிலையில் அவர் கரை திரும்பாத நிலையில் அவரைத் தேடி ஏனைய படகில் மீனவர்கள் சென்றபோது அவர் படகில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது உடலம் மீட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காட்டினை சேர்ந்த இவர் மாத்தளன் பகுதியில் நின்று கடத்தொழில் செய்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீட்கப்பட்ட உடலம் போலீஸ் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது,

இதேவேளை இவர் உயிரிழந்த அதே நேரம் இவரது உறவினர் ஒருவரும் மனற்காட்டு கடற்கரைப் பகுதியில் உள்ள வாடி ஒன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here