கில்மிஷா, அசானி உள்ளிட்ட சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன் இறுதியில் பங்கேற்றவர்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தனர்,
குறித்த இந்நிகழ்ச்சி ஜேர்மனியில் ஏப்ரல் 20 நடைபெற இருந்தது,
சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன கில்மிஷா, இறுதிப் போட்டியாளர்களான ருத்ரேஷ் குமார், சஞ்சனா, ரிக்ஷிதா, கனிஷ்கர் மற்றும் பார்வையாளர்கள் தேர்வான அசானி ஆகியோர் ஜேர்மனி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர் என பேசப்பட்டிருந்தது,
ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் குறித்த நிகழ்ச்சி பிற்போடப்படுள்ளது, அதாவது கில்மிஷா மற்றும் அசானிக்கு உரிய நேரத்தில் விசா அனுமதி கிடைக்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் திகதி அறிவிக்கப்படும் என குறிப்பிடப்படுள்ளது.
இந்நிகழ்ச்சி ஏப்ரல் 20 ஜேர்மனியில் – EHS EVENTHALLE SCHWELM எனும் இடத்தில் நடைபெற உள்ளது என கில்மிஷா தனது முகநூலில் பகிர்ந்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.