புஸ்ஸல்லாவை பெரட்டாசி மேமலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரோடையொன்றிலிருந்து இன்று காலை பிரதேச மக்களால் குறித்த சடலம் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், புஸ்ஸல்லாவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.