முகமாலையில் மனித எச்சங்கள் மீட்ப்பு.!

0
75

கிளிநொச்சி பளைப்பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகமாலைப்பகுதியில் நேற்றைய தினம் 25.04.2024 கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டதையடுத்து பளை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மாவட்ட நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று 27.04.2024காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த மனித எச்சம் மற்றும் மனித எச்ச இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் குறித்த பகுதியை கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும் கிடைக்கப்பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் தற்போது கிடைக்கப்பெற்ற மனித எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here