யாழ் பாடசாலை அதிபர் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு.!

0
142

யாழ் மகாஜனக் கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரும் உதவி அதிபருமான திருமதி ஜெயந்தி ஜெயதரன் நேற்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

இவர் இரு பிள்ளைகளின் தாயாராவார்.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வங்கி ஒன்றுக்கு சென்ற நிலையில் தல சுற்று காரணமாக மயங்கி விழுந்த நிலையில் யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாண மகாஜனாக் கல்லுாரியில் ஆசிரியையாக கடமையாற்றிய ஜெயந்தி அவர்கள், சுன்னாகம் மற்றும் அப்பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் பல்வேறு சமூகநலன் சார்ந்த அமைப்புக்களில் அங்கத்தவராக இருந்து அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here