ஒமந்தை பகுதியில் ஹெரோயினுடன் இளைஞன் கைது.!

0
84

வவுனியா – ஒமந்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (28) தெரிவித்தனர்.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுதத நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவகவலையடுத்து ஏ9 வீதி ஓமந்தை பகுதியில் இளைஞர் ஒருவரை வழிமறித்து சோதனை செய்தனர்.

இதன்போது அவரது உடைமையில் 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்தாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here