கிளிநொச்சியில் 4 கிலோ தங்கக்கட்டியுடன் இரு பெண்கள் உட்பட மூவர் கைது.!

0
112

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் அருகில் 4 கிலோ தங்கத்துடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைவாக நேற்று இரவு 11 மணியளவில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் கார் ஒன்றை சோதனையிட்ட போது காரில் மறைக்கப்பட்ட நிலையில் 4 கிலோ தங்க கட்டியை மீட்டுள்ளனர்.

பல கோடி பெறுமதியான குறித்த தங்கத்தை வவுனியா நோக்கி கடத்த முற்பட்ட போதே அது மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட காரும், அதன் சாரதி மற்றும் இரு பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here