‘சரிகமப’ நிகழ்ச்சியில் மேக் கொண்டுவந்து கொடுத்த இளைஞனை பாடச்சொன்ன நடுவர்கள்.. கண்கலங்கிய மேடை.. இதோ வீடியோ
‘சரிகமப’ நிகழ்ச்சியில் மேக் கொண்டுவந்து கொடுத்த கார்த்திக் என்ற இளைஞனின் பாடலை சமூக வலைத்தளத்தில் கேட்ட நடுவர்கள், அவனை பாடச்சொன்ன சம்பவம் அனைவரையும் மெய்சிலுக்க வைத்துள்ளது.
குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்திலே நடந்த குரல் தேர்வில் கில்மிஷா உடன் பாடல் ஒன்றை பாடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
குறித்த இளைஞனின் பாடலை சமூக வலைத்தளத்தில் கேட்ட நடுவர்கள் இளைஞனை பாடல் ஒன்று பாடச்சொல்லியுள்ளார்கள், பின்னர் இளைஞனின் குரலை கேட்டு அனைவரையும் மெய்சிலுத்த சம்பவம் நடந்துள்ளது.
குறித்த இளைஞன் பற்றி கில்மிஷா தெரிவிக்கையில்..
குரலிசையைத்தாங்கி வந்த மழலைகளுக்கு மத்தியில் குழலிசையைத் தாங்கி வந்த ஈழத்து குயில் கில்மிஷா.. என்று தனது கவிதை வரிகளால் மட்டுமன்றி என் வெற்றிக்குப் பின்னால் உழைத்த கரங்களில் ஒன்று கார்த்திக் அண்ணா..
கார்த்திக் அண்ணா இன்று தெரிவு செய்யப்பட்டதுக்கு இச் சிறு குழந்தையின் பங்களிப்பும் உண்டு என்று எண்ணிப் பார்க்கையில் உள்ளம் பூரிப்படைகிறது..வாழ்த்துக்கள் அண்ணா! என கூறியுள்ளார்.
அவர் பாடிய பாடல் இணைக்கப்படுள்ளது…