தமிழ் இசையமைப்பாளர் பிரவீன் குமார் தனது 28 வயதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாகரனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘மேதகு’ படத்திற்கு இசையமைத்தவர் பிரவீன் குமார்.
இவர் 2023ஆம் ஆண்டில் வெளியான இராக்கதன் திரைப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். இந்த நிலையில் 28 வயதேயான பிரவீன் குமார் உயிரிழந்துள்ளார்.
உடல்நலக்குறைவால் நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரவீன் குமார் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரவீன் குமாரின் இறுதிச்சடங்கு மாலை 6 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.