மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் குரங்கு கடித்த தேங்காயுடன் சென்றார் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர்!

0
86

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் அ.அமிர்தலிங்கம் பிரதேசத்தில் குரங்கு தொல்லை தாங்கமுடியாத நிலையில் குரங்கு கடித்த தேங்காயினை எடுத்து காட்டியுள்ளார்.

துணுக்காய் பிரதேசத்தில் குரங்கள் தென்னந்தோட்டங்களில் மரத்தில் உள்ள தேங்காயினை கடித்து சேதப்படுத்தி அழித்து வருவதாகவும் இதற்கு குரங்கினை துரத்துவதற்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதுடன் துப்பாக்கியினை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தென்னைஅபிவிருத்தி அதிகாரசபையின் சிபார்சு கடிதத்துடன் துப்பாக்கியினை பெற்றக்கொள்ளலாம் என இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here