சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் முகமாகவும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் முகமாகவும்,முல்லை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதோடு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது,
இந்நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச்செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் முல்லை மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் கிறிசலிஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் , பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். மகஜர் கையளிப்பின் பின்னர் உள்ளூர் பெண் தொழில் முயற்சியாரால் தயாரிக்கப்பட்ட நினைவுப்பரிசில் ஒன்றும் விருந்தினர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.