முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 120 குடும்பங்களுக்கு அவுஸ்ரோலியாவில் வாழும் மருத்துவர் விக்னராச அவர்களினால் அவரின் உயிரிழந்த மனைவியான தர்மதேவி விக்னரசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக ஆலயத்தில் அன்னதானம் வழங்கி கிராம மக்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
வன்னியின் கண்ணீர் அமைப்பின் ஏற்பாட்டில் தண்ணிமுறிப்பு அ.த.க.பாடசாலை ஊடாக பாடசாலை அதிர் சி.குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராம சேவையாளர் சி.ஜீவனராச்,சமூர்த்தி உத்தியோகத்தர் ந.அருண்குமார் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்துள்ளதுடன் கிராமத்தில் உள்ள பூதன் வயல் நாகதம்பிரான் ஆலயத்தில் அன்னதானமும் வழங்கிவைக்கப்பட்டுளளது,