பாடகி யொஹானிக்கு அரசாங்கத்தினால் காணி வழங்க அமைச்சரவை அனுமதி!!

0
139

சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் புகழ் சேர்த்த மெனிக்கே பாடல் பாடகி யொஹானி டி சில்வாவை பாராட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், 9.68 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை யொஹானி டி சில்வாவுக்கு அரசாங்கத்தால் பரிசாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பத்தரமுல்ல ரொபர்ட் குணவர்த்தன வீதியில் அமைந்துள்ள காணி, யொஹானி டி சில்வாவுக்கு வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here