மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் காணி தகராறு ஒன்றில் மருமகன் மாமனாரை கூரிய ஆயுதத்தால் தா.க்கி கொ.லை செய்து விட்டு பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்,
இந்நிலையில் அவரை கைது செய்துள்ள சம்பவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டுமாவடி மஜ்மா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய அலியார் அப்துல் ஹமீத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் காணி ஒன்றின் மருமகன் மற்றம் தாயின் சகோதரரான மாமனாருக்கு இடையே இன்று காலை 9 மணிக்கு த.கராறு ஏற்பட்டுள்ள நிலையில் மாமனாரை கூரிய ஆயதத்தால் தா.க்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் கொ.லை செய்யப்பட்டவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.