புதுக்குடியிருப்பில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் வீட்டில் கொள்ளை; சாராய போத்திலையம் விட்டுவைக்காத திருடர்கள்!

0
215

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் கொள்ளைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

20.12.21 அன்று இரவு ஆனந்தபுரம் 06 ஆம் வட்டாரப்பகுதியில் வீடு ஒன்றிற்குள் ஒட்டினை பிரித்து உள் நுளைந்த கொள்ளையர்கள் மூவர் கத்தியினை காட்டி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி அவர்களின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளார்கள்,

இதன் போது பெறுமதியான மூன்று தொலைபேசிகள் நான்குபவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பேசில் உள்ள ஏ.ரி.எம். அட்டைகள் கடவுச்சீட்டு அடையாள அட்டைகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த சாராண போத்தல்கள் உள்ளடங்கலான ஆறு இலட்த்தி 92 ஆயிரம் பெறுதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.

வீட்டில் இருந்தவர்கள் அண்மையில்தான் வெளிநாடு ஒன்றில் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது வீட்டில் சி.சி.ரிவி கமராக்கள் பொருத்தப்பட்ட் போதும் கமாரக்கள் சில அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன் ஒளிப்பதிவு சேமிக்கும் காட்டிஸ்கையும் கருவியினையும் திருடர்கள் திருடிசென்றுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 20.12.21 அன்று இரவு கைவேலி 2 ஆம் வட்டாரப்பகுதியில் வீடு ஒன்றில் வீட்டிற்குள் நுளைந்த நபர்கள் வீட்டில் அனைவரும் ஆழ்த உறகத்கதில் இருந்த நிலையில் வீட்டின் கதவு உடைத்து வீட்டில் இருந்து 20 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றம் 5 ஆயிரம் ரூபா பணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் நேற்று இரவு 11 மணி-அதிகாலை 4.30 மணிக்கும் இடையில் பதிவாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பம் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here