வவுனியாவில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!!

0
313

வவுனியா, கொக்குவௌி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய அகிலேஸ்வரன் தனுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாணவன் குளிப்பதற்காக கிணற்றில் குதித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கிணற்றுக்கு அருகில் இருந்து உயிரிழந்த சிறுவனின் ஆடைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கிணற்றில் நீர் நிறைந்திருந்ததால் நீரை இறைத்து சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சம்பவம் தொடர்பில் வவுனியா மாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here