யாழில் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தபோது மூச்சு திணறல்; குழந்தை பரிதாப மரணம்!!

0
232

யாழில் மூச்சுத் திணறலுக்கு உள்ளான மூன்று மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணுவில் தெற்கு பகுதியில் சேர்ந்த கு.யுகன் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று (22-12-2021) அதிகாலை 3.30 மணியளலில் தாய்ப்பால் குடித்த குழந்தை, காலை 6 மணியளவில் அசைவற்றுக் காணப்பட்டுள்ளது. பெற்றோர் உடனடியாகக் குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலைக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இறப்பு விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, முன்தினம் (20-12-2021) புங்குடுதீவைச் சேர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here