கிளிநொச்சி பூநகரி பகுதியில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கு.த்தி கொ.லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து கௌதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இடத்தில் காரைநகரில் இருந்தும் மற்றொரு குழு சுற்றுலா சென்றிருந்த நிலையில் இரு கோஸ்டிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை கைது செய்துள்ளதாகவும் தொியவருகின்றது.