யாழில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன்; மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
366

யாழில் குடும்பப் பிரச்சனை காரணமாக தனக்குத் தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையை சேர்ந்த அனுஷா சதீஸ்குமார் (22) என்ற 2 பிள்ளைகளின் தாயாரேச் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் சி.த்திரவதை செய்ததாகவும், இதனால் 20ஆம் திகதி தனக்குத்தானே தீவைத்ததாக கூறப்படுகின்றது.

உடனடியாக அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அதேவேளை கணவரின் முன்பாகவே அப் பெண் தீமூட்டிய நிலையில், கணவர் அதை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந் நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகி விட்ட நிலையில் அவரை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here