கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்று தடம்புரள்வு!

0
150

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் கலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (31) இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து திருகோணமலை பிறிமா ஆலைக்கு மாவுகளை ஏற்றுவதற்காக சென்ற புகையிரதமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை புகையிரத திணைக்களம் மேற்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here