நாட்டில் 2021 இல் 120,000 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்!!

0
95

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் (Sri lanka Bureau of Foreign Employment) பதிவு செய்த, ஒரு லட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் 2021 ஆம் ஆண்டில் வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்று நோய் நிலைமையிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்று சென்றுள்ளனர். கத்தாருக்கு 30 ஆயிரம் பேரும், சவுதி அரேபியாவுக்கு 27 ஆயிரம் பேரும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு 20 ஆயிரம் பேரும் சென்றுள்ளனர்.

இதனை தவிர தென் கொரியாவுக்கு ஆயிரத்து 400 பேரும், சிங்கப்பூருக்கு ஆயிரத்து 100 பேரும், சைப்ரஸ் நாட்டுக்கு ஆயிரத்து 600 பேரும், ஜப்பானுக்கு 800 பேரும் தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here