புதுக்குடியிருப்பு பகுதியில் 800 KG பாரிய குண்டு; இரும்பிற்காக கடத்திய 6 பேர் கைது!!

0
142

புதுக்குடியிருப்பில் பாரிய வெடிகுண்டினை இரும்பிற்காக கடத்திசெல்லமுற்பட்ட 6 பேர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்ப்டட காணியில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடி குண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

04.01.2022 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட இரண்டு பாரிய வெடிகுண்டு இருப்பதை அங்கு வேலி அமைப்பதற்காக சென்ற நபர் இனம் காட்டியதை தொடர்ந்து அதனை இருப்பிற்கு விற்பதற்காக எடுத்து செல்லமுற்பட்ட போது புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோக்கிரம் எடைகொண்ட குறித்த குண்டுகள் இரும்பிற்காக கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது,

கைது செய்யப்பட்டவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர்கள் இவர்களை இன்று 05.01.2022 மாங்குளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here