முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 19 அகவையுடைய இளைஞனை காணவில்லை என பொலீசில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தேராவில் பகுதியில் 19 அகவையுடைய இளைஞன் 17 அகவை யுவதியினை கூட்டிக்கொண்டு குடும்பம் நடத்தி வந்த நிலையில் கடந்த 03.01.2022 ஆம் திகதி தொடக்கம் இளைஞனை காணவில்லை என பொலீசில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இருவரும் சொந்தங்கள் என்றும் இருவரின் விருப்புடன் கடந்த மாத தொடக்கத்தில் எதுவித திருமண பதிவும் செய்யாத நிலையில் குடும்பமாக வாழ்ந்துள்ளார்கள்.
பெண் வீட்டார் இளைஞனை சட்டப்படி திருமணம் செய்துவைக்க முனைந்த போது இளைஞன் தலைமறைவான நிலையில் இளைஞனை காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒருமாதமாக உல்லாசமாக குடும்ப வாழ்கையில் வாழ்ந்துவிட்டு சட்டப்படி திருமணத்தினை செய்யமுற்பட்ட பெரியவர்கள் முன்னின்றபோது இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.
இவ்வாறசம்பவங்களை உங்கள் கிராமங்களில் நடக்காதவாறு கிராமத்தினை வழிநடத்தும் அமைப்பினர் சமூக மட்ட அமைப்புக்கள் பார்த்துக்கொள்ளவேண்டிய தேவையும் உள்ளது.