இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் இல்லை; சவுதியிடம் கடன் வாங்க தீர்மானம்!!

0
99

இலங்கை விமான நிறுவனத்திற்கு எரிபொருள் வழங்குவதற்கு டொலர் கடன் கொடுப்பனவுக்காக சவுதி அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் விமான சேவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விமான நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் அதன் எரிபொருள் கொடுப்பனவுக்காக  சவுதி அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

குறுகிய கால அல்லது நீண்ட கால கடன் வசதியைப் பெறுவது தொடர்பாக கலந்துரையாடல்  நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பெறக்கூடிய கடன் தொகை எ வ்வளவு என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here